காதலின் ரிங்காரம்..!
எழுத்தாளர்: எழிலன்பு
(அத்தியாயம் - 3)
வீட்ல ஏத்துக்க மாட்டாங்கன்னு தெரிஞ்சும் காதலிக்கிறவங்களை நினைச்சா எனக்கு ஆச்சரியமா இருக்கும், அதேநேரத்துல ஏன் இந்த வேண்டாத வேலைன்னுத் தோணும். அதென்னவோ, வேணும்ன்னே செய்யுற மாதிரி தோணுது, பெத்தவங்க பாசத்தையும், சலுகையையும் மிஸ் யூஸ் செய்ற மாதிரியும் தோணும்.
அதே மாதிரி, பெத்தவங்களும் பெத்தப் பொண்ணு மேல உசிரையே வைச்சிருப்பாங்க,
ஆனால் இந்த காதல்ன்னு சொன்னவுடனே அந்த பாசம், நேசம், செல்லம் எல்லாம் எங்கே போயிடும்ன்னே தெரியாது.
பிடிக்காத காதலுனால பெத்த பொண்ணையே கௌரவக் கொலை பண்றவங்களா கூட மாறிப்போயிடறாங்க, அதுவும் எப்படின்னு தெரியலை..?
என்னைக் கேட்டால் கோழி கிட்ட கையை நீட்டறது எதுக்கு, அப்புறம் குத்துதே, குடையுதேன்னு புலம்பறது எதுக்கு சொல்லுங்க ? பேசாம பெத்தவங்க கை காட்டுறவனை கட்டிக்கிட்டு போய் தொலையலாம் போல.
அப்படின்னா பாசம் பொய்யா, ஜாதி உண்மையா ? இல்ல
சாதி பொய்யா, பாசம் உண்மையா....? எது நிசம் ???
மதுமதி மாதிரி நிறைய பெண்களும், ஆண்களும் இன்றளவும் காதலுக்காக சாதியோடவும், அந்தஸ்தோடவும், பெத்தவங்களோடவும்,
ஆணவ கொலையோடவும்...
போராடிக்கொண்டே இருக்கிறார்களோ...?



CRVS (or) CRVS 2797