“நீ என் மேல கோபமா இருக்கியா என்ன? எப்பயும் ஜீவான்னு சொல்ல மாட்ட? இன்னைக்குப் புல்லா நீ என்னை ஜீவான்னு தான் கூப்பிட்டு இருக்க. என்ன விசயம்?” என்றான்
‘நான் கோபமா இருக்கிறது எல்லாம் இவருக்குப் புரியுமா? அதிசயம் தான்!’ என மனதில் நொடித்துக் கொண்டவள்,
“நீங்க முதலில் மாத்திரையைப் போடுங்க, அப்புறம் பேசலாம்” என்றாள்.
” நீ முதலில் எதுக்குக் கோவம்னு சொல்லு. அப்பத்தான் மாத்திரை போடுவேன்” என இவனும் திருப்பினான்.
“சின்னப் பிள்ளை மாதிரி அடம் பிடிக்காதீங்க ஜீவா” எனக் கடியவும்.
“பார்! இப்ப கூட ஜீவா சொல்ற?” என்றான்.
‘ஆமா தேவைக்குப் பேசிடுறாதீங்க. இப்ப தேவை இல்லாம எத்தனை பேச்சு பார்!’ என அவள் முனங்கியது காதில் விழவும்.
“நான் தேவையானது என்ன பேசலை?” எனக் கேட்டான்.
மாத்திரையைப் போடாமல் கேள்வியாகக் கேட்கவும் பொறுமை இழந்தவள் அவளாகவே அவனின் வாயை திறக்க வைத்து மாத்திரையை வாயில் போட்டு தண்ணியைக் கொடுத்தாள்.
அவள் செய்வதைத் தடுக்க முயலாமல் ஒத்துழைத்தவன் மாத்திரையை முழுங்கிவிட்டு ‘இப்பவாவது சொல்றியா?’ என்பது போலப் பார்த்தான்.
அதற்கு மேலும் பேச்சை வளர்க்காமல் ”நேத்து நீங்க வந்ததும் ஏன் உங்களுக்கு உடம்பு சரி இல்லாததைச் சொல்லலை? நீங்க என்கிட்ட சொல்லாம இருக்கவும் எனக்கு எவ்வளவு வலிச்சது தெரியுமா? நைட் எல்லாம் ஏன் அப்படிச் செய்தீங்கனு நினைச்சு என்னால சரியா தூங்க கூட முடியல” என லேசாகக் குரல் கமற கண்ணில் நீர் தேங்கக் கேட்டாள்.
“ஹேய்! இதுக்குப் போயா அழுவ? இதெல்லாம் ஒரு விசயம்னு இதுக்கு அழுதுக்கிட்டு” எனவும்,
“என்ன சொன்னீங்க? வீட்டுல நம்ம இரண்டு பேர் தான் இருக்கோம். என்கிட்ட சொன்னாதானே தெரியும். எதுவும் சொல்லாம நீங்க பாட்டுக்குப் போய்ப் படுத்துட்டீங்க. கஷ்டமா இருக்கு எனக்கு. என்னை நீங்க ஒதுக்கி வைக்கிறது போல” எனக் கலங்கினாள்.
“ச்சேச்சே! அப்படி எல்லாம் இல்லை தனு” என்றவன் ”அழாதே! ப்ளீஸ்!” என அவளை அணைத்து ஆறுதல் படுத்தினான்.
அவள் கலங்குவதைப் பார்த்து சமாதானப் படுத்தினாலும் அவனுக்குத் தான் சொல்லாமல் விட்டது பெரிய விசயமாகவே தெரியவில்லை.
‘நான் எப்பயும் இப்படித் தானே இதைப் போய்ப் பெரிசா எடுத்துக்கிறாளே?’ என்று தான்அவன் எண்ணம் ஓடியது.
***
தனுவை பார்த்த ஆனந்த் “நான் போன பிறகு என்ன நடந்துச்சு அண்ணி” என மெதுவாகக் கேட்டான்.
தனு நடந்ததை அவனிடம் சொல்ல ‘ஹோ’ எனச் சில நிமிடங்கள் அவனும் திகைத்து நின்றவன், பின்பு ஜீவாவின் அருகில் சென்று அமர்ந்து “சாரிண்ணா! நீ டிப்ரஷனால தான் அப்படி இருந்தேன்னு தெரியாம நான் வேற வந்ததும் கத்திட்டேன்” என மன்னிப்பு கேட்டான்.
“டேய்! உன் மேல ஒரு தப்பும் இல்லை. நான் தான் உன் மேல கோபப்பட்டுப் போனை வேற போட்டு உடைச்சிட்டேன் நான் தான் ஸாரி கேட்கனும்” என்ற ஜீவா “ஸாரிடா” என்றான்.
“ஹய்யோ! போன் போனா போகுதுண்ணா. நீ என்கிட்ட ஸாரி கேட்காத” என்றான் ஆனந்த்.
இரண்டு பேரும் மாறி மாறி ஸாரி கேட்க “இப்ப இரண்டு பேரும் பேசாம இருக்கப் போறீங்களா இல்லையாடா?” என ஒரு அதட்டல் போட்டார் அரசி.
அவரின் அதட்டலில் கப்சிப் என அந்த இடம் அமைதியாக, ஆனந்த் வேகமாகத் தன் கன்னத்தை மறைத்துக் கொண்டான்.
அவன் ஏன் அப்படிச் செய்கிறான் எனப் புரியாமல் அரசி பார்க்க, ஜீவா புரிந்து கொண்ட பாவனையில் சிறிது சத்தமாகச் சிரித்தான்.
அவன் அப்படிச் சிரிக்கவும் தனுவும்,அரசியும் வாஞ்சையுடன் அவனைப் பார்த்தார்கள்.
அறிவழகன் “எதுக்கு ஜீவா சிரிக்கிற? நீ ஏண்டா கன்னத்தில் கை வைச்சுக்கிட்டு நிக்கிற?” என இன்னும் புரியாமல் கேட்டார்.
“அப்பா எனக்கு அம்மாவை பார்த்தா பயமா இருக்குப்பா” என்றான் ஆனந்த் இன்னும் கையைக் கன்னத்தில் இருந்து எடுக்காமல்.
“என்னடா எதுக்குப் பயம்?” எனக் கேட்டவர் “முதல கையைக் கீழே போடு” எனச் சொன்னார்.
“நான் கையை எடுத்ததும் அம்மா அடிச்சுட்டா?” என்றான் பயந்தது போல.
அப்போது தான் அரசிக்கும் அவன் செய்ததின் காரணம் புரிந்தது போல “படவா உன்னை” என அடிக்கப் போவது போல எழுந்து வந்தார்.
“என்னை விட்டுருங்கம்மா நான் பாவம்” என ஓடுவது போல நடித்தான்.
அவனின் விளையாட்டில் சிறிது நேரம் அந்த இடமே சிறிது கலகலப்பாகியது.
அனைவரும் முகத்திலும் சிறிது புன்னகை குடிபெயர்ந்தது.
மேலும் படிக்க பிரீமியம் பிளான் வாங்கவும்!
Reviews
There are no reviews yet.