Only logged in customers who have purchased this product may leave a review.
பூவோ? புயலோ? காதல்!
பூவோ? புயலோ? காதல்! — Preview
“இங்கன வா கண்ணு…” என்று மென்மையாகத் தன் படுக்கையில் வந்து அமர சொல்லி அழைத்தான் இளஞ்சித்திரன்.
அவள் இருக்கையில் இருந்து எழுந்து படுக்கையில் அமர, அவளின் முகத்தையே ஆழ்ந்து பார்த்தான்.
இருவரும் எதுவுமே பேசிக் கொள்ளவில்லை. கண்கள் மட்டும் ஒன்றோடு ஒன்று கலந்து நின்றன.
‘ஏன்யா இப்படிச் செய்த?’ என்று கணவனைக் கேள்வி கேட்க கயற்கண்ணியின் நாவு துடித்தாலும் ஒன்றும் கேட்காமல் அமைதியாகவே பார்த்துக் கொண்டு இருந்தாள்.
இளஞ்சித்திரனின் பார்வை மனைவியின் தலையில் இருந்து படுக்கையில் தெரிந்த கால் வரை ஆராய்ச்சியாக ஊர்ந்து சென்றது.
பின் மெதுவாகக் குளுக்கோஸ் ஏறாத கையை நகர்த்தி மனைவியின் அருகே கொண்டு வந்தவன், அவளின் வயிற்றின் மீது கையை வைத்தான்.
கையை வைத்த அடுத்த நொடி அவனின் கண்களில் இருந்து சரசரவென்று கண்ணீர் இறங்கி வந்தது.
மனைவியிடம் எதுவுமே கேட்கவில்லை அவன்!
மனைவியின் வயிற்றில் கையை ஊர்ந்து செல்ல விட்டவன் முகம் கசங்கி, உதடுகள் நடுங்க ஆரம்பித்தன. கண்களிலும் நிற்காமல் கண்ணீர் வடிந்து கொண்டே இருந்தது.
‘புரிந்து கொண்டான். அவன் புரிந்து கொண்டான்…’ என்று உணர்ந்து கொண்ட கயற்கண்ணி “எய்யா…” என்று விக்கித்து அழைத்து உடைந்து அழ ஆரம்பித்தாள்.
‘அம்மாவை காப்பாத்த என் கூடச் சேர்ந்து வேண்டிக்கோனு கேட்டேனே தங்கம். ஆனா அம்மாக்குள்ள இருந்த உன்னைய காப்பாத்தணும்னு இந்த அப்பன் நினைக்காம போய்ட்டேனே… அதனால தேன் இந்த அப்பன் வேணாம்னு போய்ட்டியா தங்கம்?’ என்று குழந்தையிடம் அன்று போல் மானசீகமாகக் கேட்டான் இளஞ்சித்திரன்.
‘அம்மாக்குள்ள நீ பத்திரமா இருப்ப, அதுனால ஓ அம்மாவை மட்டும் காப்பாத்தினா போதும்னு இந்த அப்பன் நினைச்சுப்புட்டேனே தங்கம். நீ எப்படி என்னைய நினைக்காம போகலாம்னு தேன் இந்த அப்பன் உனக்கு வேணாம்னு முடிவு பண்ணிட்டியா தங்கம்?’ என்று குழந்தையிடம் நியாயம் கேட்பவன் போல உடைந்து போய்க் கேட்டவன் கண்கள் தொடர்ந்து கண்ணீர் சிந்தின.
‘உன்னைய காப்பாத்தாம போன இந்த அப்பனை மன்னிச்சுடு தங்கம்…’ என்று குழந்தையிடம் மனதிற்குள் மன்னிப்பு கேட்டவன், “என்னைய மன்னிச்சுடு கண்ணு. நம்ம புள்ளயை காப்பாத்த முடியாத பாவி ஆகிட்டேன் நான்…” என்று உடைந்த குரலில் மனைவியிடம் மன்னிப்பு கேட்டான்.
“யோவ்! என்னய்யா இப்படிப் பேசிட்டு…” என்றவள் மேலும் ஒன்றும் சொல்ல முடியாமல் அழுதாள்.
தனக்காக உயிரையே கொடுக்கத் தயாரானவன் அவன். தன் மேல் ஒரு அடி கூட விழ கூடாது என்று போராடினானே! அவன் கத்தி குத்து வாங்கி அசந்த நேரம் தான் இமயவரம்பன் அவளைத் தாக்கினான்.
அவனால் முடிந்த வரை அவளைக் காக்க தானே அவன் போராடினான். அவ்வளவு போராடியும் குழந்தை இல்லாமல் போனதில் அவன் மேல் எப்படிக் குறை சொல்ல முடியும்?
ஆனால் அப்படியும் அவன் தன்னையே குறை சொல்லிக் கொள்வதை அவளால் ஜீரணித்துக் கொள்ள இயலவில்லை.
“நீ என்ன பண்ணுவய்யா? நீ ஒரு தப்பும் பண்ணலையா. எல்லாம் நம்ம விதி! அவ்வளவு தான்…!” என்றாள் விரக்தியாக.
“விதி இல்லை கண்ணு, சதி…!” என்று சொன்னவனின் குரல் என்றைக்கும் இல்லாமல் கடுமையாக ஒலித்தது.
கணவனின் குரலில் இருந்த பேதத்தைக் கண்டவள், “ய்யா…?” என்று புரியாமல் கேள்வியாக அழைத்தாள்.
*****
நேற்று நானே வேதாவிடம் பேசி விடுகிறேன் என்று மருத்துவரிடம் சொல்லிவிட்டு வந்தவன், அதன் பிறகு உடனே பேச தயக்கம் காட்டினான். அவனின் கோபத்தினால் தான் மனைவியின் ரத்த அழுத்தம் இன்னும் அதிகரித்தது.
இந்த நிலையில் மீண்டும் அவளிடம் ஏதாவது பேசி தானே அவளின் உயிருக்கு இக்கட்டான நிலையை உண்டாக்கி விடக்கூடாது என்று பேசுவதைத் தள்ளிப் போட்டான்.
இன்று தான் அவளுக்கு ரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்திருந்தது. ஆனாலும் பேச தயங்கித்தான் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தான். ஆனாலும் ஒரேயடியாகவும் தள்ளிப் போட முடியாதே!
சும்மாவே ஏதாவது நினைத்துக் குழப்பிக் கொள்கிறாள். இந்த நிலையில் அவளுக்குள் இருக்கும் குழப்பத்தை இன்னும் வளர விடக்கூடாது என்று நினைத்தவன் இப்போதே பேசிவிடும் முடிவை எடுத்தான்.
தன் தோளில் சாய்ந்திருந்த மனைவியின் முகத்தைத் திருப்பித் தன் முகம் பார்க்க வைத்தவன், அவளின் நெற்றியில் இதமாக இதழோற்றல் ஒன்றை வைத்தான்.
“ம்ம் இங்கே…” கணவனின் இதழோற்றலை கண்களை மூடி ரசித்த வேதா, தன் இதழ்களின் மீது கையை வைத்து கேட்டாள்.
அவளே கேட்டதில் மென்னகை புரிந்த ரித்விக், தன் அதரங்களை அவளின் இதழ்களில் குடியேற்றினான்.
“ம்ம் இங்கேயும்…” இதழ்களுக்கு அடுத்துக் கன்னத்தைக் காட்டினாள் அவனின் மணவாட்டி.
அவள் கேட்டதை மறுக்காமல் கொடுத்த ரித்விக் மனைவியின் தோளை சுற்றி கைகளைப் போட்டு மெதுவாகத் தன் தோளோடு அணைத்துக் கொண்டான்.
ஒருவரின் அணைப்பில் ஒருவர் சுகமாக இளப்பாறினர். பல நாட்களுக்குப் பிறகு கணவன் தன்னை இவ்வளவு நெருக்கத்தில் வைத்துக் கொள்கிறான் என்ற நினைவில் வேதாவின் கண்கள் கலங்கினாலும், அந்தத் தருணத்தை ரசித்து அனுபவித்தாள்.
“வரு…”
“ம்ம்ம்…”
“வரு… வருமா…” என்று மீண்டும் தயக்கத்துடன் மனைவியை அழைத்தான் ரித்விக்.
“சொல்லுங்க ரித்வி…” அவனின் தோளில் இருந்து லேசாகத் தலையை உயர்த்திக் கேட்டாள் வேதவர்ணா.
“நான் உங்கிட்ட ஒரு விஷயம் பேசணும் வரு…”
“பேசுங்க ரித்வி…”
“ஆனா நீ டென்ஷன் ஆகக் கூடாது சரியா?” என்று தயக்கத்துடன் மனைவியிடம் உறுதி கேட்டான்.
“ம்ம்… சரி ரித்வி…” என்றாள் ஏன் கணவன் இப்படிக் கேட்கிறான் என்று புரியாத முகப்பாவனையுடன்.
“ஆன்ட்டியை உடனே வரச் சொல்லுவோம்னு சொன்னதுக்கு ஏன் வேண்டாம்னு சொன்ன?” என்று கேட்டான்.
சித்ராவை உடனே வர வைப்பது பிடிக்காமல் தானே நேற்று ரத்தம் அழுத்தம் உயர்ந்தது. அதனால் அதில் இருந்தே பேச்சை துவங்கினான்.
“ஹான்… அது… அது ரித்வி…” என்று உடனே தடுமாறினாள் வேதவர்ணா.
“தயங்காம சொல்லு வரு. நான் நேத்து உன் மேல் கோபப்பட்டது தப்புத்தான். இனி பட மாட்டேன். இனி உனக்கு ஒரு விஷயம் வேண்டாம்னா எனக்கும் வேண்டாம் தான்…” என்று உறுதியளித்து மனைவி மனம் விட்டு பேச தூண்டினான்.
கணவனின் பேச்சு அவளை இளக்க, சிறிது தயக்கத்தை உதறியவள், “என்னைத் தப்பா நினைக்க மாட்டீங்க தானே ரித்வி?” என்று மெதுவாகக் கேட்டாள்.
‘அப்படி என்னவோ?’ என்று உள்ளுக்குள் பதறினாலும், “மாட்டேன்…” என்று வெளியே உறுதியாகச் சொன்னான்.
“எனக்குப் பயமா இருக்கு ரித்வி…” என்றாள்.
“பயமா? என்ன பயம் வரு?” புரியாத குழப்பத்துடன் கேட்டான் கணவனவன்.
“குழந்தையை நினைச்சு…” என்றாள் உள்ளே சென்ற குரலில்.
“குழந்தையை நினைத்தா? குழந்தைக்கு என்ன?” என்று இன்னும் தான் குழம்பி போனான் ரித்விக்.
“அம்மா நம்ம கூட ஒரு மாசம் தான் இருப்பேன்னு சொன்னாங்க…” என்றாள்.
“என்ன சொல்ற வரு… குழந்தையை நினைத்து பயம்னு சொன்ன… இப்போ ஆன்ட்டி எத்தனை நாள் நம்ம கூட இருப்பாங்கனு கணக்கு சொல்ற? புரியுற மாதிரி சொல்லேன்…”
“நான் ஒரு பொண்ணா இருந்துகிட்டு இப்படிச் சொல்றேன்னு என்னைத் தப்பா நினைக்காதீங்க ரித்வி…”
“சரிமா… நினைக்கலை… என்னனு சொல்லு…” பொறுமையாகவே விசாரிக்க ஆரம்பித்தான்.
“அம்மா ஒரு மாதம் தான் குழந்தையைப் பார்த்துக்க இருப்பேன்னு சொன்னாங்க ரித்வி. ஆனால் நம்ம தேவைக்காக இப்போதே நாம வேகமாக அம்மாவை வர வச்சுட்டா, குழந்தை பிறந்த பிறகு அந்த ஒரு மாதம் கூட நம்ம கூட இல்லாம, சீக்கிரமாகவே கிளம்பிட்டா, நான் என்ன பண்ணுவேன்?” என்று கலக்கத்துடன் கேட்டாள் வேதவர்ணா.
“அவங்க கிளம்பி போனால் என்னமா? அதான் நீயும், நானும் குழந்தையைப் பார்த்துக் கொள்வோமே?” என்று கேட்டான்.
“நீங்க என்ன பேசுறீங்க ரித்வி?” என்று சட்டென்று கோபப்பட்டாள் வேதவர்ணா.
அவளின் திடீர் கோபத்தை வியந்து பார்த்தான் ரித்விக்.
அவனின் பார்வையைக் கண்டவள், “அய்யோ… சாரி… சாரி… சாரி ரித்வி. தெரியாமல் கோபப்பட்டுட்டேன். இதுக்காகத் திரும்ப என் கூடப் பேசாமல் இருந்துடாதீங்க ரித்வி…” என்றாள் கண்கள் கலங்க பதட்டத்துடன்.
மனைவியின் திடீர் கோபமும், அது அப்படியே பதட்டமாக மாறியதையும் கவனித்த ரித்விக் இப்போது அவளின் மனநிலையை நன்றாகவே புரிந்து கொண்டான்.
மேலும் படிக்க பிரீமியம் பிளான் வாங்கவும்!
புதிய கதை பற்றிய அறிவிப்பை மின்னஞ்சல் மூலம் அறிந்துகொள்ள Follow செய்து கொள்ளுங்கள்.
📘 Description
காதலித்து, வீட்டாரின் எதிர்ப்பை மீறி இணையும் இரண்டு ஜோடிகள்.
அவர்களின் காதலே அவர்களின் வாழ்க்கையில் புயலை வீச வைக்கிறது.
அந்தப் புயலை பூவாக மாற்றினார்களா காதல் ஜோடிகள்?
கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
கதையைப் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை தளத்தில் ரேட்டிங் & ரிவ்யூ மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இந்தப் பக்கத்தில் உள்ள கதை / புத்தகம் ©Ezhilanbu அவர்களின் முழு காப்புரிமைக்கு உட்பட்டது.
❌ அனுமதி இல்லாமல் நகலெடுக்க, Screenshot எடுக்க, PDF / Audio / Video வடிவில் பகிர கடுமையாகத் தடை செய்யப்படுகிறது.
⚖️ மீறல் கண்டறியப்பட்டால், Copyright Act படி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
Related products
-
ஜீவசுரபி
Rated 5.00 out of 5 -
என்னிதய தாள லயமாய் நீ
Rated 5.00 out of 5


Reviews
There are no reviews yet.