• Copyright ©️ 2019 - 2025 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • எழிலன்பு நாவல்கள் தளத்திற்கு செல்ல 👉 ezhilanbunovels.com/nandhavanam / நந்தவனம் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் nandhavanamnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
  • கதையைத் திருடி PDF போடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

Admin

Ezhilanbu
Staff member
Administrator
மெய் பிம்பம் நீயே!

1000211516.webp
அடுத்த மாதம் முதல்... நந்தவனம் தளத்தில் வரும்...

இப்போது சின்ன டீசர்🙂

“ம்ம்ம்…”

“ச்சோ…”

“என்ன நீங்க?”

“அப்படி எல்லாம் வேணாம்…”

“ம்ம்ம்… ப்ப்ச்… ஹாங்… ஹம்மா…”

“ஏய், கத்தாதேடி… கொஞ்ச நேரம்தான், அமைதியா இரு…”

“ஹா… இப்படிப் பண்ணா… ஹா… எப்படி… அமைதியா…”

விதவிதமான சிணுங்கலும், முணுமுணுப்பும், அலறலும், வளையல், கொலுசு சத்தமும் என்று உள்ளறையிலிருந்து தொடர்ந்து வந்து கொண்டே இருக்க, தலையணையால் இரண்டு காது பக்கமும் அழுத்தி பிடித்தும், சத்தம் கேட்க, உறங்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தாள் தாமரை.

உள்ளேயிருந்து வந்த சப்தங்களைக் கேட்க, கேட்க அவளுக்குக் காதுகளும், உடலும் கூசிப் போயின.

இதுவரை தாமரை உபயோகித்து வந்த அந்த வீட்டின் ஒற்றை அறை இப்போது அவளின் அண்ணன், அண்ணியின் அறையாக மாறிப் போயிருக்க, தாமரையின் இருப்பிடம் வீட்டின் கூடமானது.

அவளுக்கு அதில் கூடப் பிரச்சினை இல்லை. ஆனால், தினமும் இரவு புதுமண தம்பதியின் முனகலும், முணுமுணுப்பும், சிணுங்கலும் கேட்டுக்கொண்டே இருப்பதுதான் அவளைத் திணறடித்தது.

வெளியே வயது பெண் ஒருத்தி இருக்கிறாள் என்ற நினைவு இல்லாமல் அவர்கள் அப்படி நடந்து கொள்வது கோபத்தையும் தந்தது. ‘சத்தம் இல்லாமல் எதையும் செய்து தொலைய வேண்டியதுதானே’ என்று கடுப்பாகத் தனக்குள் புலம்பிக் கொள்வாள்.

அந்த நேரம் அவளின் அன்னையை வெகுவாக‌ தேடியது அவளுக்கு. அவர் இருந்திருந்தால் வயது பெண் இருக்கும் இடம். சற்று பார்த்து நடந்து கொள்ளச் சொல்லி அவர்களைக் கண்டித்திருப்பாரே.

இப்போதோ அவர்களைக் கண்டிக்க யாருமில்லை.

🙂🙂🙂

அன்று மாணவிகள் அனைவரும் சேலை கட்டுவதாக முடிவு செய்திருக்க, அன்னையின் சேலை ஒன்றை கட்டிக்கொண்டு வந்தாள் தாமரை.

சேலையை அழகாக மடிப்பு வைத்து கட்டி, தலைக்குக் குளித்து, கூந்தலை தளர்வாகப் பின்னி, மதுரை மல்லியை தலையில் சூடி, பவுடர் மட்டும் முகத்தில் அடித்து, நெற்றியில் சின்ன ஒட்டுப் பொட்டு மட்டும் வைத்து, அழகு பதுமையெனக் கிளம்பி வந்த தாமரையை விட்டு கதிரவனின் இமைகள் கூடச் சிமிட்ட மறந்து போயின.

“அடேய் கதிரவா… கொஞ்சமா ஊத்துடா உன் ஜொள்ளை. காலேஜூக்குள்ள போட் விட வச்சுடாதே!” என்று சுகுமாரும், குமரனும் அவனைக் கேலி செய்ய ஆரம்பித்தனர்.

அவர்களின் கேலியை கவனிக்கும் நிலையில் கதிரவன் இல்லை.

அழகு மயிலென ஒயிலாக நடந்து வந்து கொண்டிருந்தவளை நோக்கி அவனின் கால்கள் நகர ஆரம்பித்திருந்தன.

கண்கள் ஒளிர தன்னை நோக்கி வந்து கொண்டிருந்தவனைப் பார்த்து தாமரையின் கால்கள் அதற்கு மேல் நகரவில்லை.

அவனின் விழுங்கும் பார்வையில் அவளுக்கு நாணம் வந்தது.

“உன் பெயரை தேவதைன்னு வைக்காமல், ஏன் தாமரைன்னு வச்சாங்க?” என்று கேட்டபடி அருகில் வந்தவனை மெல்ல இமைகளை உயர்த்திப் பார்த்தாள் தாமரை.

கண்ணிற்கு அன்று தாமரை கண் மை வைத்திருக்க, அவள் அப்படி இமை உயர்த்திப் பார்த்ததில் சொக்கி போனான் கதிரவன்.

“ஐயோ! கொல்றயேடி என்னை… இப்பவே உன்னைத் தனியா எங்கேயாவது அழைச்சு போய் என்னைக் கிறுக்குப் பிடிக்க வைக்கிற, இந்தக் கண்ணு… கன்னம், உதட்டை எல்லாம் ஒரு வழியாக்கணும்னு தோனுதே…” என்று அவஸ்தையுடன் கிறங்கியவன் குரலில் ஏக்கமும், தாபமும் கொட்டிக் கிடந்தது.

“கதிர்…” என்று சிணுங்கலுடன் அழைத்தாள் தாமரை.

தன் மனம் கவர்ந்தவன், தன்னை ரசிக்கிறான் என்பதில் அவளின் பெண்மனம் உவகைக் கொண்டது.

“இந்தக் கூட்டத்திலிருந்து எங்கேயாவது எஸ்கேப் ஆகி போயிடுவோமா?” என்று ஆங்காங்கே கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருந்த மாணவர்களைச் சுட்டிக்காட்டி கேட்டான் கதிரவன்.
 
அதெப்படி, அண்ணன் அண்ணியை கடுகடுக்கிறா, அதே அவளை காதலிக்கிறவன் கண்ணு, காது, மூக்குன்னு உருகி டயலாக் அடிச்சா மட்டும் சிணுங்குறா... இது ஏதோ முன்னுக்குப்பின் முரணா இருக்கிற மாதிரியில்ல...?

CRVS (or) CRVS 2797
 
டீசர் செம சகி. வாங்க வாங்க வெயிட்டிங்
 

Latest threads

Back
Top Bottom